10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளை கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் ஜூன் 14 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை:
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், “ஒரு தற்காலிக பொதுத்தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2020), ஜூன் 25 முதல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூன் 25க்குள் தேர்வுகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
DRDO செயற்கை நுண்ணறிவு & சைபர் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மொழித் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி கணிதமும், ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் மொழியும், ஜூன் 21 ஆம் தேதி அறிவியல், ஜூன் 23 ஆம் தேதி மூன்றாம் மொழியும், சமூக அறிவியல் ஜூன் 25 ஆம் தேதியும் நடத்தப்படும்.
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!
இந்த தேர்வு அட்டவணையில் எந்தவொரு ஆட்சேபனை இருந்தாலும் மாணவர்கள் அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை ஆட்சேபனைகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்