1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
கர்நாடகாவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தற்போது எண்ணமில்லை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா பள்ளிகள் திறப்பு:
கர்நாடகாவில் பள்ளிகள் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணமாக 8 ஆம் வகுப்பு முதல் பியூசி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதிகமாகி வரும் கொரோனா தாக்கம் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். இந்த வாரத்தில் கொரோனா தொழில்நுட்ப துறையுடன் ஆலோசனை கேட்க உள்ளோம்.
50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது எண்ணம் இல்லை. தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது. இந்த அறிவிப்பை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை விட கல்வி பெரிது இல்லை. தேசிய கல்விக்கொள்கை பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்