கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து 5, 8, 9 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
கர்நாடகா மாநிலத்தில் 5, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகளை மாநில வாரியப் பாடத்திட்டத்திற்கு நடத்துவது என்ற கர்நாடக அரசின் முடிவை நிறுத்தி வைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றியுள்ளது. அதன் காரணமாக பொதுத்தேர்வுகளை அரசு ஒத்திவைத்துள்ளது.
கிராம உறுப்பினர்களுக்கான சம்பளம் கிடுகிடுவென உயர்வு – அரசு அறிவிப்பு!
இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், 11 ஆம் வகுப்புக்கான போர்டு தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் 5, 8, 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி முதல் தொடங்க இருந்தது. ஆனால் அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த முடிவு ஒத்தி வைத்துள்ளது.