கிராம உறுப்பினர்களுக்கான சம்பளம் கிடுகிடுவென உயர்வு – அரசு அறிவிப்பு!

0
கிராம உறுப்பினர்களுக்கான சம்பளம் கிடுகிடுவென உயர்வு - அரசு அறிவிப்பு!

ஒடிசா மாநில அரசானது பஞ்சாயத்து ஊழியர்களுக்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் பெண் ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களையும் அதிகரித்துள்ளது.

சம்பள உயர்வு:

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இத்தேர்தலையொட்டி அனைத்து மாநில அரசுகளும் பொது மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று (12.03.2024) ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புதிய அறிக்கையை கிராம உறுப்பினர்கள் என்னும் பஞ்சாயத்து ஊழியர்களுக்காக வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் படி, பஞ்சாயத்து ஊழியர்களுக்கான சம்பளமானது பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

அதாவது பஞ்சாயத்து சர்பஞ்சிற்கு வழங்கப்படும் ரூ.2,350/- மாத சம்பளம் ரூ.10,000/- ஆகவும், ஜில்லா பரிஷத் தலைவருக்கு ரூ.9,380/-க்கு பதிலாக ரூ.30,000/- ஆகவும், ஜில்லா பரிஷத்தின் துணைத் தலைவருக்கு ரூ.7,040/-க்கு பதிலாக ரூ.20,000/- ஆகவும், ஜில்லா பரிஷத் உறுப்பினர்களுக்கு ரூ.3,530/-க்கு பதிலாக ரூ.10,000/- ஆகவும், பஞ்சாயத்து சமிதி தலைவருக்கு ரூ.3,530/-க்கு பதிலாக ரூ.15,000/- ஆகவும், பஞ்சாயத்து சமிதியின் துணைத் தலைவருக்கு ரூ.2,350/-க்கு பதிலாக ரூ.7,500/- ஆகவும், நயீப் சர்பஞ்ச்களுக்கு ரூ.940/-க்கு பதிலாக ரூ.4,000/- ஆகவும் ஊதிய உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.162.68 கோடியை அரசு ஒதுங்கியுள்ளது. மேலும் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்டு வந்த 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை 25 நாட்களாகவும் அரசு உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!