புகைபிடிப்பதற்கான வயது 21 ஆக அதிகரிப்பு – மாநில அரசு அதிரடி!
கர்நாடகா மாநிலத்தில் புகைபிடிப்பதற்கான வயது 18 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக உயர்த்தி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
புகைபிடிப்பதற்கான வயது:
இந்தியாவில் பள்ளி செல்லும் மாணவர்களில் இருந்து முதியவர்கள் வரைக்கும் அனைவரும் புகையிலை, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். இந்நிலையில், கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் புகையிலை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – செப்.30ல் ஏற்பாடு!
அதே போல, 12 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் தான் அதிகளவில் ஹூக்கா பார்களுக்கு வருவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வயதிலேயே ஹூக்கா சாப்பிடுவதால் ஒரு மனிதனை தவறான பாதைக்கு இழுத்து செல்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதே சமயம், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டத்தின் படி (COTPA) பொது இடங்களில் புகைபிடிப்பதை தவிர்க்கும்படியும், மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் மத நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு 100 மீட்டர் பகுதிகளுக்கு உள்ளே புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.