இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகா தலைநகராகிய பெங்களூரில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கையில் பெங்களூரு தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இரவு 9 மணி அளவில் தொடங்கி காலை 6 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறையாத காரணத்தினால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழு ஊரடங்கினை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு வயது வரம்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!!
இன்று இரவு 9 மணி முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்ய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.