ஏப்ரல் 9 முதல் மருத்துவமனைகளில் முன்பதிவு கட்டாயம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக கூட்ட நெரிசலை தடுக்க முன்பதிவு மூலமாக மட்டுமே வெளி நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் முன்பதிவு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 42,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் புதுச்சேரி மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே அதனை தடுக்க ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜிப்மர் மருத்துவமனைகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 09) முதல் முன்பதிவு மூலமாக மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,15,000 பேருக்கு கொரோனா – பொதுமக்கள் அச்சம்!!
அதன்படி அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொலைபேசி மூலமாக முன்பதிவு பெற்று சிகிச்சைக்கு வர வேண்டும். முன்பதிவு பெறுவதற்கான தொலைபேசி எண்கள் www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசுகள் அறிவிப்பு!!
மேலும் “ஹலோ ஜிப்மர்” என்ற செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவசர தேவைகளுக்கு எந்தவித முன்பதிவு தேவையில்லை. மேலும் ஒரு நாளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.