இந்தியாவில் ஒரே நாளில் 1,15,000 பேருக்கு கொரோனா – பொதுமக்கள் அச்சம்!!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்பும் தொற்று தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,15,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 630 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலை தாக்கத்தை விட கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,26,86,049 லிருந்து 1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 1,66,177 பேர் இறந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி இதுவரை 8,70,77,474 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 59,856 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,32,279 லிருந்து 1,17,92,135 ஆக உயர்ந்துள்ளது.
இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசுகள் அறிவிப்பு!!
இதுவரை 8,43,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனாவால் 98,795 பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது ஒரே மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,15,736 பேராக உயர்ந்துள்ளது.