இந்தியாவில் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை – ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

0
இந்தியாவில் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை - ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை - ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை – ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்த நிலையில், கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5ஜி சேவை

நாடு முழுவதும் 5ஜி சேவை பிரதமர் மோடி தலைமையில் 6வது இந்திய கைபேசி மாநாடு கடந்த ஆண்டு அக். 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 331 நகரங்களில் 5ஜி சேவை உள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேகாலயா,ஜம்மு-காஷ்மீர், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு, ஆகிய நகரங்கள் அந்த பட்டியலில் இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்த இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள நகரங்களுடன் 34 நகரங்களுக்கு 5ஜி சேவை விரிவுபடுத்துவதன் மூலம் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!