தமிழக அரசு ஊழியர்கள் சம்பள பிடித்தம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் (அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்) சார்பாக ஒரு நாள் ஊதியமாக ரூ.150 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா நிதியுதவி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம் இரு தவணைகளாக வழங்க உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசிற்கு ரூ.150 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஒருநாள் ஊதியத்தைக் கொரோனா நிதியாக வழங்க முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து ஜாக்டோ ஜியோ வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த பேரிடர் காலத்தில் தமிழக அரசு இந்த நோயினை கட்டுப்படுத்த உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கான நிதியை திரட்ட வேண்டிய நிலைமையில் உள்ளன. எனவே 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆகியோர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.