இந்தியாவில் விவசாயிகள் நிதியுதவி பெற இது கட்டாயம் – கடைசி தேதி ஆகஸ்ட் 31! அரசு அறிவிப்பு!
இந்தியாவில் அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், அவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
விவசாயிகளுக்கு அறிவிப்பு
இந்தியாவில் விவசாயிகளின் நலனிற்காக பல திட்டங்களை அரசு அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.
Bank & SSC CHSL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – முற்றிலும் இலவச மாதிரி தேர்வு!
மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்த பலர் அதில் பலன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அதாவது இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என்பது தான். இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகளின் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் இதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். அந்த தேதிக்குள் இணைக்காமல் இருந்தால் இந்த முறை தவணைத் தொகை கிடைக்காது என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை e-KYC செய்யாதவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் ஆதார் விவரங்களை உடனே விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.