நாளை செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ – தொடங்கியது கவுண்ட் டவுண்!!
பிரேசில் நாட்டை சேர்ந்த செயற்கைகோளுடன் சேர்த்து மொத்தம் 19 செயற்கைகோள்களை இஸ்ரோ நாளை விண்ணில் ஏவுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 8.45 மணிக்கு துவங்கியது.
TN Job “FB Group” Join Now
செயற்கைகோள்கள்:
இந்தியா பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது பிரேசில் நாட்டை சேர்ந்த அமாசோனியா -1 என்ற செயற்கைகோளுடன் சேர்த்து மொத்தம் 19 செயற்கை கோள்களை இஸ்ரோ நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்துகிறது. நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் செயற்கைகோள்களுக்கான கவுண்ட் டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் – பிரதமர் மோடி கருத்து!!
பிரேசிலின் அமேசானியா -1 செயற்கைகோளுடன் சேர்த்து இந்தியாவை சேர்ந்த நியூ பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கை கோள்களும், யுனிட்டி சாட்டின் 3 செயற்கைகோள்களும், சத்திஸ்வான் சாட்டின் 1 செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. கூடவே அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைகோள்களும் ஏவப்பட்டவிருக்கின்றன. 19 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இந்த ஆண்டின் முதல் ராக்கெட் : 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது.
சென்னை: பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அந்தவகையில், பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் – மகிழ்ச்சியில் மக்கள்!!
அமசோனியா 1 செயற்கை கோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டானது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 78 ஆவது ராக்கெட் ஆகும். பிரேசிலின் அமசோனியா -1 செயற்கைகோளானது புவியிலிருந்து 637 கிமீ தூரத்தில் அதன் புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு பிரேசிலின் காடுகள் அழிப்பை கண்கணிப்பதற்கும் விவசாயத்தை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும்.