இஸ்ரோ PSLV C-51 ராக்கெட் இறுதிக்கட்ட பணிகள் – பிப்ரவரி 28 விண்ணில் பாயும்!!
இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த 21 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி C-51 ராக்கெட் வரும் பிப்ரவரி 28ம் தேதி விண்ணில் பாய உள்ள நிலையில் இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ PSLV C-51:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி C-51 ராக்கெட் வரும் பிப்ரவரி 28ம் தேதி 21 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய இருக்கிறது. இது பூமியில் இருந்து 752 கி.மீ தூரத்தில் புவிவட்டப்பாதையில் செயற்கோள்களை நிலை நிறுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
செயற்கைகோள்கள்:
பி.எஸ்.எல்.வி C-51 ராக்கெட்டில் இந்தியாவை சேர்ந்த 20 செயற்கைகோள்களும், பிரேசில் நாட்டை சேர்ந்த 1 செயற்கோளையும் சேர்த்து மொத்தம் 21 செயற்கைகோள்கள் விண்ணில் நிறுத்தப்பட உள்ளது.
இதில், பிரேசிலின் அமசோனியா-1 பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அமேசான் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கும், இந்தியாவின் தனியார் துறை மூலம் தயாரிக்கப்பட்ட ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனிட் சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
இறுதிக்கட்ட பணிகள்:
தற்போது ராக்கெட் வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இறுதி பணியான கவுண்ட்டவுன் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியில் தொடர்ந்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்