தமிழகத்தில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதில் முறைகேடு – நிறுவனம் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேஸ் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வெளியான புகார்
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டரை விநியோகம் செய்கின்றனர். அதில் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை உள்ள சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை உள்ள சிலிண்டருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதில் வீட்டு சிலிண்டர் 918.50 ரூபாயாகவும், வணிக சிலிண்டர் ரூ. 1942 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நவ.27ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் பிரதமரின் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் 35 லட்சம் இணைப்புகள் உள்ளன. ஆனால் சில கிராமங்களில் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களில் பலர் இன்னும் சிலிண்டர் இல்லாமல் விறகு அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். அது குறித்து விசாரணை செய்ததில் சில ஏஜென்சிகளே சிலிண்டர் முன்பதிவு செய்து, அந்த சிலிண்டரை உணவகம், கேட்டரிங் நடத்துவோருக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேஸ் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு முறைகேடு செய்தவர்களுக்கு அபராதம் விதித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.