IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
IRCTC என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த ரயில்களில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல விதிமுறைகளை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
IRCTC முன்பதிவு:
இந்திய ரயில்வே மக்களுக்கான சிறந்த பல சலுகைகளை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக ரயில் முன்பதிவு திட்டம். இந்த திட்டம் மக்களுக்கு அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. IRCTC மூலமாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது லோயர் பெர்த்தில் கன்பார்ம் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!
ஆனால் இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்துவது கிடையாது. இது குறித்து இந்திய ரயில்வே துறை விளக்கம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்திய மக்கள் நிறையப் பேர் ரயில் பயணம் செய்வதை அதிகமாக விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தாங்களும் ரயிலில் பயணத்தை விரும்புபவராக இருந்தால் தற்போது அறிவித்த செய்தி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயில்களில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தும் லோயர் பெர்த் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கும். அதனால் முத்த குடிமக்கள் ரயில் பயணம் செய்ய திணறி வருகின்றனர். ஆனால் தற்போது இது குறித்து ரயில்வே துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ரேஷன் கடைதான் பேங்க்!
இந்த நிலையில் தற்போது பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ஏசி பெட்டிகளில் தலையணை போர்வை வழங்கும் வசதியை ரயில்வே மீண்டும் ஆரம்பித்து வருகிறது. கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி நிறுத்தப்பட்டு இருந்தது. இப்போது பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.