மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து – உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!

0
மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து - உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!
மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து - உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!
மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து – உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பண்டிகைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் அரசு பண்டிகைகளை அமைதியான முறையில் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது காவல் துறையினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுமுறை ரத்து

இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் மத்திய அரசு கட்டுப்பாடுகளை முழுவதுமாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் பிரமாண்டமாக பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் பண்டிகைகளை அமைதியாகவும் பாதுகாப்புக்காகவும் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர், எஸ்.எச்.ஓ., சி.ஓ., கோட்ட ஆணையர் வரையிலான அனைத்து நிர்வாக/காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த அறிக்கையில் கூறியதாவது, உத்தர பிரதேச மாநிலத்தில் பண்டிகை தினத்தை சிறப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும். அதனால் வருகிற மே 4ம் தேதி வரை மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர், எஸ்.எச்.ஓ., சி.ஓ., கோட்ட ஆணையர் வரையிலான அனைத்து நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் தற்போது விடுப்பில் உள்ள அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!