IPL 2025 : PBKS vs GT பஞ்சாப் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி.. சொந்தமண்ணில் பின்னுக்கு தள்ளி சாதனை..
IPL 2025 தொடரின் 5-வது போட்டியானது நேற்று (25-03-2025) குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து, டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, “முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது”.
மேலும், “இப்போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களும், சஷாங்க் சிங் 44 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து, மறுபுறம் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும் மற்றும் சாய் சுதர்சன் 74 ரன்களும் குவித்தனர். மேலும், குஜராத் தரப்பில் பவுலிங் செய்த சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும், ரஷித் கான், காகிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி தற்போது பஞ்சாப் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது ” குறிப்பிடத்தக்கது.


























