
IPL 2025 : CSK vs MI போட்டியில் ஏற்பட்ட சிறப்பான சம்பவங்கள்.. நூர் அகமது மற்றும் விக்னேஷ் புத்தூரின் அதிரடி பந்துவீச்சு.. மிரண்டு போன ரசிகர்கள்..
2025 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (23-03-2025) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற CSK அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் CSK கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 53 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 45 பந்தில் 65 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். மேலும், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார் தோனி. இறுதியாக மும்பை அணியின் விக்னேஷ் புத்தூர் CSK அணியின் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


























