என்ன சொல்றீங்க.. IPHONE 16 பயன்படுத்த தடையா…?? ” மீறினால் சட்டவிரோத நடவடிக்கை எடுக்கப்படுமா”..??
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆப்பிள் ஐ போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் LOGO பெற்றிருக்கும் மொபைல்கள் ஒரு தனித்துவமான அந்தஸ்த்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தற்போது இந்தோனேசியாவின் முதலீட்டு கொள்கையை “ஆப்பிள் நிறுவனம்” ஏற்காததால், இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடல் போன்களை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் கர்த சஸ்மிதா அவர்கள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தோனேசிய மக்கள் வெளிநாடுகளில் இருந்து ஐபோன் 16-யை வாங்கி பயன்படுத்த கூடாது என்றும் மீறும் பட்சத்தில் அது சட்டவிரோத செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


























