எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடியலையா..?? அப்போ உடனே இதை செய்யுங்க.. நிதியுதவி கிடைக்கும்..!!
எதிர்பாராத நிகழ்வுகளை நிர்வகிக்க நிலையான வைப்பு (FD) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த விருப்பமாக மக்கள் கருதுகின்றனர். மேலும், பிக்சட் டெபாசிட் போலவே அவசரநிலை செலவுகளை எதிர்கொள்ள “எமர்ஜென்சி ஃபண்ட்” உதவுகிறது. எனவே ஒவ்வொரு தனிநபரும் இந்த அவசரகால நிதியில் குறைந்த அளவு பணத்தை சேர்த்தால், அவசர செலவு போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும். இந்த எமர்ஜென்சி ஃபண்டில் சேமிப்பு குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.
அதாவது,” நீங்கள் சாதாரண மாதாந்திர வருமானம் பெறுபவராக இருந்தால் 3 முதல் 6 மாதங்களுக்கான வழக்கமான செலவுத் தொகையை எமர்ஜென்சி ஃபண்டில் வைக்க வேண்டும். இதுவே சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஃப்ரீ லான்சராக இருந்தால் 6 முதல் 12 மாத செலவுகளை சேமிப்பது நல்லது”. உதாரணமாக உங்களுடைய மாத செலவுகள் ரூ.50,000 எனில், 6 – 12 மாத வரை சேமிக்க எமர்ஜென்சி ஃபண்ட் – ரூ.6 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் சேமிக்கும் பணத்தை தேவைப்படும் போது உடனடியாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைவான வட்டி (2.5% – 5%) மட்டுமே கிடைக்கும். மேலும், உங்களுக்கு வரக்கூடிய வருமானம் வங்கிகளின் வரம்புகளுக்கு உட்பட்டது என்பதால் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமே இந்த நிதியை பயன்படுத்தும் படி நிபுணர்கள் கூறுகின்றனர்.


























