புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகம் – தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம்!
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2022-23 ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், மாணவர்கள் தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம்:
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தின் படி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 10ம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
50,000+ அரசு வேலைவாய்ப்புகள் 2023 – தேர்வர்கள் கவனத்திற்கு.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!
அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் வேளையில் மாணவர் சேர்க்கையின் போதே மாணவர்களுக்கான தாய் மொழியை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம் எனவும், ஏனாமில் தெலுங்கு பாடத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்யலாம் எனவும், மாஹேயில் மலையாள மொழியை விருப்ப பாடமாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.