தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் போர்.. நீடிக்கும் பதற்றம்.. சர்வதேச விமான சேவைகள் ரத்து!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டரை வருடங்களாக போர் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மற்றொரு போர் தொடங்கியுள்ளது. அதாவது இஸ்ரேல் எல்லைக்குள் நேற்று முன்தினம் (அக்டோபர் 1) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே!!
இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இஸ்ரேல் தனது மக்களுக்கு தொலைபேசி வாயிலாக குறுந்தகவல் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லெபனான், இஸ்ரேல் வான்வழிகளைத் தவிர்த்து மாற்று வழிகளில் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



























