சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – இன்று நடைதிறப்பு!
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக வெகுநாட்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
உலக புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்று. இந்த கோயில் கேரள மாநிலத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
தரிசனத்திற்கான டோக்கன்கள் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதாவது முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றி நடக்குமாறு தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!
பின்னர் மழையின் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் புரண்டது. அதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது மழை இல்லாத காரணத்தால் மீண்டும் கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் தினசரி ஹரிவராசன சடங்குகள் முடிந்த பின்னரே 9 மணியளவில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாத பூஜைக்கு பின்னர் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நவம்பர் 15 ஆம் தேதி கோயில் திறக்கப்படும் என்று கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.