சிறப்பு வசதி – ரயிலில் பயணம் செய்யும் முதியவர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் மக்கள் பல பலர் அதிகமாக ரயில் பயணங்களை விரும்புகின்றனர். முதியவர்கள் தங்களது முதுமையை மறக்க அதிகமாக அயனம் செய்வதையே விரும்புகின்றனர். அவர்களுக்கு பயன்படும் வகையில் 3 சிறப்பு வசதிகள் உள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த் வழங்குவதில் முன்னுரிமை வழங்கியுள்ளது.
ரேஷன் கார்டில் இத்தனை வகையா? முழு விவரங்களுடன்!
லோயர் பெர்த் கிடைக்காத பட்சத்தில் TTE-ஐ சந்தித்து காலியான லோயர் பெர்த் கேட்டுப் பெற முடியும். 3 டியர் ஏசி மற்றும் 2 டியர் ஏசி பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கு 3 லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த இருக்கைகளைப் பெறலாம். வழக்கமான விரைவு ரயில்களை விட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற முழுமையான ஏசி கோச்களைக் கொண்ட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்காக அதிக எண்ணிக்கையிலான பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன.























