இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம்
இந்தியன் ரயில்வே துறையில் 5696 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில் சென்னையில் மட்டும் 146 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஐடிஐ, டிப்ளமோ, பிடெக், பிஇ ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த பணிக்கு கணினி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான விண்ணப்பம் ஜன.20 ஆம் தேதி வெளியான நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு, அனைத்து பிரிவினருக்கும் வயது நரம்பினை (18 முதல் 33 வரை) 3 ஆண்டுகள் அதிகரித்து இருப்பதாக ரயில்வே தேர்வு வாரியம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.