தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை நிலவரம்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - இன்றைய வானிலை நிலவரம்!

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வானிலை நிலவரம்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜனவரி 30ஆம் தேதி ஆன இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க சாதகமான சூழல் நிலவி வருவதாக தெரிகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!