போரால் இந்தியாவில் எரிபொருள், கேஸ் தட்டுப்பாடா…? சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!
கடந்த சில நாட்களுக்கு முன் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்து, இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த போரால் கேஸ் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எண்ணி மக்கள், கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. IPL போட்டிகள் ஒத்திவைப்பு.. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்பரேஷன் இதுதொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது” என்றும், “பெட்ரோல் மற்றும் டீசலை தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” என்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவுறுத்தியுள்ளது.


























