ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் 2020
திருவண்ணாமலையில் ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்க விரும்போவோர் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தோர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 11 மாவட்டங்கள், மற்றும் புதுவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பித்தாரர்கள் குறைத்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
இராணுவ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் அறிவியலில் 8/10 / 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பதவிக்கு ஏற்ப வேறுபடலாம்.
தேர்வு செயல்முறை:
இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
- உடல் தகுதி தேர்வு
- உடல் அளவு தேர்வு
- மருத்துவ தேர்வு
- பொது நுழைவுத் தேர்வு மூலம்
மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றவர்கள் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 01.03.2020 முதல் 31.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Click Here – Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |