
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாம்கள்..!!
கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று (06-05-2025) நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. “சிந்தூர்” என்பது திருமணமான பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கிறது.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (08-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
அதாவது, “லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத் மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், தெஹ்ரா காலன், கோட்லி மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் சிகல்கோட் ஆகிய பகுதிகளிலும் இந்திய ராணுவப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்படவில்லை எனவும், தீவிரவாத இலக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நிதானத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் விளக்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

























