இந்தியாவில் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்வு – வெளியான காரணம்!
இந்தியாவில் கோதுமை விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 1.6% அதிகரித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோதுமை விலை
இந்தியாவில் ரேஷன் கடைகளில் கோதுமை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக கோதுமை விலை 1.6% அதிகரித்துள்ளது. இதற்கு, விழா காலத்தை ஒட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி போன்றவை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் 26 மில்லியன் டன் கோதுமை பெற முடிந்தது.
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய போர்ட்டல் – மாநில அரசு ஏற்பாடு!
மேலும் அடுத்து அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர இருப்பதால் கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் விலை அதிகரித்துள்ள நிலையில் தேர்தல் நெருங்குவதால் இருப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் கோதுமை மீதான 40% இறக்குமதி வரியை குறைப்பன் மூலமும் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என சில விமர்சனங்கள் வந்துள்ளது. மேலும் தலைநகர் டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை ரூ.27390க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 22% அதிகம் ஆகும்.