மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியாதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்விற்கு ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு

நாடு முழுவதும் பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து அகவிலைப்படியை அரசு உயர்த்துகிறது. அந்த வகையில் தற்போது அகவிலைப்படி உயர்வு 4% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த 4 சதவீத உயர்வு மூலம் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படுகிறது. மேலும் DA மற்றும் DR என்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அடிப்படை சம்பளம்/ஓய்வூதியத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்வு – வெளியான காரணம்!

அதன் பின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படும். இந்த அகவிலைப்படியானது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும். மேலும் ஏற்கனவே துணை ராணுவப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி அளவிலான அதிகாரிகளுக்கான தீபாவளி போனஸ் ரூ.7,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!