ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,624 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இருந்த போதிலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஒரு நாள் பரவலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
நேற்று ஒருநாள் அறிவிப்பின் படி கொரோனாவால் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை 66 லட்சத்து 10 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒருநாள் மட்டும் 2 ஆயிரத்து 624 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்ச்த்து 89 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
மேலும் கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை 38 லட்சத்து 67 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 25 லட்சத்து 52 ஆயிரத்து 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தற்போது முதல் அலையை போல் இல்லாமல் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக உள்ளது. ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை விகிதம் 83.49%, உயிரிழந்தவர்கள் சதவிகிதம் 1.14% & சிகிச்சை பெறுவோர் சதவிகிதமும் 15.37% ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 29 லட்சத்து 01 ஆயிரத்து 412 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 13 கோடியை 83 லட்சத்து 79 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.