தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தமிழகத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி (நாளை) மகாவீரர் ஜெயந்தி காரணமாக, அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுபான கடைகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 25ம் தேதி மகாவீரர் ஜெயந்தி ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் அன்று ஒருநாள் மட்டும் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகளில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி நண்பகல் 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இதனால் அரசு தெரிவித்த உத்தரவை மீறி மதுபான கடைகளை திறப்பது, மதுபானங்களை பதுக்குவது, விற்பனை செய்வது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மே 2 ஆம் தேதி அன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் அன்றும் மதுபான கடைகளுக்கு விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.