தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

2
தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 25) அமலுக்கு வரும் முழு ஊரடங்கு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு, தனியார் போக்குவரத்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி என அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் பெட்ரோல் பங்குகள் தடையின்றி செயல்படும். அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கும், இரவு ஊரடங்கின் போது அந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் தங்களது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.

தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

அதேபோல ஞாயிற்று கிழமை அன்று விடுமுறை நாள் என்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் செயல்பட அனுமதி கிடையாது. மக்கள் ஊரடங்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!