தாய்லாந்து – இந்தியா UPI இணைப்பு – ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு!
தாய்லாந்து மற்றும் இந்தியாவுடனான கூட்டு வர்த்தகக் குழுவின் 13 வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இரு நாடுகளிடையேயான வர்த்தக, குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் UPI இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
UPI:
இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிமாற்றம் அதிகரித்து உள்ளது. தற்போது மக்கள் UPI வாயிலாக போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பண பரிமாற்ற செயல்களை பயன்படுத்தி சிறிய கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான தகவல்கள் – முதல்வர் அறிவிப்பு!
இந்த நிலையில் UPI பணப்பரிமாற்றத்தை மிகவும் எளிதாக்கும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் UPI இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நேற்று தாய்லாந்து மற்றும் இந்தியாவுடனான கூட்டு வர்த்தகக் குழுவின் 13 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாய்லாந்தின் உடனடி ஊதிய சேவையுடன் இணைப்பது மற்றும் உள்ளூர் நாணயத்தின் வர்த்தக பரிவர்த்தனை குறித்து இரு நாடுகளும் விவாதித்துள்ளது.