இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு – மத்திய அரசு திட்டம்!!

0
இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு - மத்திய அரசு திட்டம்!!
இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு - மத்திய அரசு திட்டம்!!
இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு – மத்திய அரசு திட்டம்!!

நாட்டில் உள்ள 300 க்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 12 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் குறைப்பு:

2018-19 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள 348 பொதுத்துறை நிறுவனங்களில் 249 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் 86 நிறுவனங்கள் கட்டமைப்பில் உள்ளதாகவும், 13 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் படி நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 3 அல்லது 4 அலகுகளாக அடக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு – மத்திய அரசு நிதி!!

இந்நிலையில் நாட்டில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்களை 12 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நஷ்டத்தில் ஓடும் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்களில் தனியார்மயமாக்கல், பிற துறைகளுடன் இணைத்தல், துணை நிறுவனமாக மாற்றுதல் மற்றும் முழுவதுமாக மூடுதல் போன்றவற்றின் மூலம் பொதுத்துறை நிர்வாகம் குறைப்பு அமல்படுத்தப்பட உள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!