8ம் வகுப்பு முடித்தவர்க்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு !
இந்திய அரசின் அஞ்சல் துறையில் இருந்து Skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு 05.08.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
01.07.2023 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் வயது விதிமுறைகளின்படி தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த வர்த்தகத்தில் 1 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
ESIC ஆணையத்தில் ரூ.1,27,141/- ஊதியத்தில் வேலை – தேர்வு எளிதா தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19, 900/- முதல் ரூ.63, 200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு தேர்வர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர் தேவையான தகுதிகள் மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 5 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.