ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

0
ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்.
ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்.

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மே 3 வரை நீடிக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன..?

  • பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
  • மே 3 வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
  • அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது.
  • இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.
  • மத நிகழ்வுகளுக்கு தடை, வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.
  • மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.
  • தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.
  • மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.
  • மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி.
  • தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்.
மாஸ்க் இல்லையென்றால் அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து – முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் !!!

ஏப்ரல் 20க்கு பிறகு என்னென்ன தளர்வுகள்..?

  • ஏப்.,20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
  • சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். மாஸ்க் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி.
  • ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.
  • மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
  • விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
  • சிறு குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
  • தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.
  • ஐடி நிறுவனங்கள் அதனை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணிகளை தொடரலாம்.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்.,20 முதல் இயங்கலாம். ஆனால், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.
  • மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்.
    அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.
  • ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கான விமான சேவைக்கு அனுமதி
  • ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கிய பயணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
  • மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில்நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.
  • ஊரக பகுதிகளுக்கு தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.
  • ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம், அத்யாவசிய பொருட்கள் செயல்படலாம்.
  • கொரியர் நிறுவனங்கள், கேபிள், டிடிஎச் சேவைகள் இயங்கலாம்.

மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!