கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்க திட்டம் – மத்திய அரசு முடிவு!!
இந்திய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெளியான அறிவிப்பு
இந்தியாவில் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் விலை தாறுமாறாக அதிகரித்தது. அதனால், மக்கள் கடுமையான சிரமத்தில் இருந்தனர். பலர் கரண்ட் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையில் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்று (ஜன.22) ராமர் கோவில் கும்பாபிஷேகம் – வீடுகளில் விளக்கேற்றும் மக்கள்!!
அரசின் அறிவிப்பின் படி தகுதியான ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது. அதனால், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ. 400 மானியம் தற்போது கிடைக்கிறது. தற்போது, மேலும் மானிய தொகையை உயர்த்த அரசு முடிவு செய்ய இருக்கிறது. இந்த மானியம் ரூ.300 வரை இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.