இன்று (ஜன.22) ராமர் கோவில் கும்பாபிஷேகம் – வீடுகளில் விளக்கேற்றும் மக்கள்!!
இந்தியாவில் அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற இருக்கிறது.
திறப்பு விழா
இந்தியாவில் பிரமாண்டமாக தயாராகி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன.22) அயோத்தியில் நடைபெற இருக்கிறது. மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் பலர் குவிந்து இருக்கின்றனர். அதனை தொடர்ந்து, விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மாநில மக்கள் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி கொண்டாட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஜன. 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமில்லமல், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மேலும், சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் முழு கட்டுப்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், போலீசார் மத்திய பாதுகாப்பு படையினர் என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் 10000 கண்காணிப்பு கேமராக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், பேரிடர் மீட்பு படையினர் இருப்பது குறிப்பிடத்தக்கது.