தமிழகத்தில் ஜன. 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜன. 30 ஆம் தேதி தியாகராஜர் 177 ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி ஆராதனை விழா நடைபெற இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த விழாவை முன்னிட்டு ஜன. 30 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.