நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் ஆபத்து – எய்ம்ஸ் தலைவர் விளக்கம்!!
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தான் ஆபத்தானது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஆபத்தான வைரஸ்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா தாக்கம் இந்த ஆண்டு 2வது அலையில் வீரியமாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வயதானவர்களும், சிறுவர்களும் அதிகமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது, “நாடு முழுவதும் இரண்டாம் அலை தாக்கம் பரவி வருவதால், நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகில் கொரோனா வைரஸானது பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதனால் நாம் மூன்று விஷயங்களை செய்ய வேண்டும். அவை,
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
- முதலாவதாக, அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து, தீவிர கட்டுப்பாடு மண்டலத்தை உருவாக்கி, அங்கு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
- இரண்டாவது, கூட்டம் அதிகம் கூடும் வாய்ப்புகளை தடை செய்ய வேண்டும்.
- மூன்றாவது, தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும். மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
சீனாவின் முதல் ஆய்வறிக்கையின் படி, ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து கொரோனாவிற்கு எதிராக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், இந்த மருந்துகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுக்கும், ஆனால் இறப்பை தடுக்காது என தெரிவிக்கப்பட்டது. அந்த மருந்து எபோலாவுக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஆன்டிவைரஸ் மருந்தாகும்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை தேர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனாவிற்கு நல்ல ஆன்டிவைரஸ் மருந்தும் இல்லை. நல்ல சிகிச்சையும் இல்லை. எனவே மக்கள் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அரசு தெரிவித்த கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.