12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை தேர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக செய்முறை தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் சிறப்பு செய்முறை தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி கொண்டுள்ளது. அரசும் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!!
ஆனால் இந்த பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவது கடினம் என்பதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!
இந்நிலையில் மாணவர்கள் சிலர் கொரோனா தொற்று காரணமாக செய்முறை தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு வேறு ஒரு நாளில் சிறப்பு செய்முறை தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களை போனில் தொடர்பு கொண்டு தேர்வு எழுத முடியாதவர்கள் நிலை குறித்து தெரிந்து கொண்டு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.