மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் நோய்த்தொற்று கை மீறி போய்விட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகமாக கூட்டம் கூடும் திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,619 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்து உள்ளது.
திருப்பதி கோவிலில் பகதர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!!
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேம்படுத்த இன்று காலை (ஏப்ரல் 19) 11.30 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு ஊரடங்கு நாளை (ஏப்ரல் 20) முதல் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.