நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!

1
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் - மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் - மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!

தற்போதுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் பரவல் அதிக அளவில் இருந்ததால் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், சிறு, குறு வணிகர்கள், மற்றும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் தங்களின் பொருளாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். மேலும், நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் – கேரள அரசு அறிவிப்பு!!

இரண்டாம் அலை:

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிகவும் அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்து வந்த இத்தனை நாட்களில் இல்லாத அளவிற்கு புதிதாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

TN Job “FB  Group” Join Now

விளக்கம்:

ஆலோசனையில், நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மட்டும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மீட்டெடுக்கும் முயற்சி குறித்து ஆலோசனை செய்து கொண்டே இருந்தால் எப்படி? எப்போது மீட்டெடுக்கப்போகிறீர்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!