மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் சம்பள மாற்றம்!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலைப்படி (DA & DR) ஜூலை 1 முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்களில் சம்பளம், ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சம்பள மாற்றம்:
ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் நிலுவையில் உள்ள மூன்று டி.ஏ.க்களை வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ.வை அரசாங்கம் முடக்கியிருந்தது. தற்போது ஊழியர்கள் நிலுவைத் தொகையை பெற உள்ளனர். இந்த மாற்றங்கள் தங்கள் மாத சம்பளத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியாமல் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத டி.ஏ. நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இறுதி டிஏ 28% (17% + 11%) ஆக உயறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AICPI தரவுகளின் படி, 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏவில் 3% அதிகரிப்பு, 2020 ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கு 4% உயர்வு மற்றும் 2021 ஜனவரி-ஜூன் மாதங்களில் 4% அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11% உயர்வு மற்றும் இறுதி டிஏ 28 சதவீதமாக மாறும்.
தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!!
நிலுவைத் தொகையுடன் டி.ஏ. சம்பளத்தில் சேர்க்கப்படும் போது பயண கொடுப்பனவும் நீட்டிக்கப்படும். டிஏ அதிகரித்த பிறகு, மத்திய ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் கிராச்சுட்டி பங்களிப்பும் மாறும். கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் அனைத்து வகையான கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், ஜூலை மாதம் டி.ஏ மற்றும் டி.ஆர் உயர்வு, நைட் ஷிப்ட் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Poor epf pensioners r pathetic since 1995 enacted from congress govt to date. MOST OF EPF EMPLOYEERS STILL GETTING BELOW 1OOO/ ONLY. Whether Modi Govzt lookinto.