தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் – கேரள அரசு அறிவிப்பு!!
இன்று முதல் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
இரண்டாம் அலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் முதல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களில் தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவு உச்சத்தை அடைந்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. நாட்டின் பல மாநிலங்களிலும் இரவு நேர மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளது.
தமிழக கல்வித்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!
முழு ஊரடங்கு:
டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பல மாநிலங்களும் இ-பாஸ் முறையை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
கேரளா அரசு:
கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணாமாக நேற்று ஒரே நாளில் 18,273 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் இன்று முதல் கட்டாயம் என கேரளா அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரக்கூடிய பொதுமக்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்