தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. தற்போது மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அதனால் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இவ்வாறு மழை பெய்வது கடந்த 4 அல்லது 5 ஆண்டு காலத்திற்கு பிறகு நிகழ்கிறது என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது இன்று தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றிய அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து – உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!
அத்துடன் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் வட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திருச்சி, மதுரை, திருத்தணி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூர் பரமத்தியில் 38 டிகிரி செல்ஷியஸ் என 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.