நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். புதிய கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு அதனை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அதில் பேசிய மத்திய நிதி அமைச்சர் கூறுகையில், “நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்தாலும், மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் தவிர முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. முழு ஊரடங்கு காரணமாக மீண்டும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். கொரோனா 2வது அலையில் தாக்கத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை தனிமைபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் இருக்கும்”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
மேலும் இந்த சந்திப்பின் போது கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.