இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 45,083 பேருக்கு தொற்று! 460 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 45,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 460 பேர் உயிரிழந்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா முதல் அலை பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. கொரோனா 2வது அலையில் மாநில வாரியாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனால் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்திற்கு மாநிலம் கட்டுப்பாடுகள் வேறுபட்டதால் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியும் சற்று தொய்வடைந்தது.
ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,95,030 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,37,830 ஆக அதிகரித்துள்ளது. சற்று நிம்மதி அளிக்கும் வகையில் 35,840 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,18,88,642 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,68,558 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 97.56% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆகவும் பதிவாகி உள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.10% ஆக குறைந்துள்ளது. இதுவரை 63,09,17,927 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.